சேலம், ஜன.12: ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் ஜட்டு(24). இவர் சேலம் அரியானூரில் உள்ள டீக்கடை ஒன்றில் சமையல் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இவரது நண்பர்கள் மனோஜ், அருண்குமார். இவர்களுடன் கடந்த 8ம் தேதி அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் மது குடித்துக்கொண்டிருந்தார். அப்போது அவரது செல்போனை நண்பரான அருண்குமார் எடுத்துச் சென்று விட்டார். இது தெரியாமல் அருகில் இருந்தவர்களிடம் செல்போனை தருமாறு ஜட்டு கேட்டுள்ளார். பின்னர் வெளியே வந்த ஜட்டு அரியானூரில் உள்ள ஹார்டுவேர் கடை அருகில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த 2 பேர் கடுமையாக தாக்கினர். தலை, கை, கால்களில் காயம் ஏற்பட்டு கீழே விழுந்தார். அங்கிருந்வர்கள் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், கொண்டலாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரை தேடி வருகின்றனர்.
The post சேலம் அரியானூரில் வாலிபரை தாக்கிய 2 பேருக்கு வலை appeared first on Dinakaran.