திருப்பூர், ஜன. 12: ஆதார் சேவை மையங்கள் தாலுகா அலுவலகங்கள் மற்றும் மாநகராட்சி அலுவலகங்களில் செயல்பட்டு வருகின்றன. இவை சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை செயல்படுவதில்லை. இதுபோல் அரசு விடுமுறை நாட்களிலும் செயல்படுவதில்லை.
இதற்கிடையே, வேலைக்கு செல்கிறவர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளின் வசதிக்காக விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை தோறும் ஒவ்வொரு தாலுகா அலுவலகம் வாரியாக சுழற்சி முறையில் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி அவினாசி தாலுகா அலுவலகத்தில் இன்று (12ம் தேதி) ஆதார் சிறப்பு முகாம் நடக்கிறது.
The post இன்று ஆதார் சிறப்பு முகாம் appeared first on Dinakaran.