- மல்லசமுத்திரம்
- புள்ளகவுண்டம்பட்டி
- Elachipalayam
- ரகுராஜ்
- அன்புசெல்வன்
- அம்பிகாபுரம் காலனி, மருதுப்பட்டி கிராமம்
- விராலிமலை
- திருச்சி மாவட்டம்
- திருச்செங்கோடு
மல்லசமுத்திரம், ஜன.11: எலச்சிபாளையம் அடுத்த புல்லாகவுண்டம்பட்டியில் கஞ்சா விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம், விராலிமலை அருகே உள்ள மருதுபட்டி கிராமம், அம்பிகாபுரம் காலனியை சேர்ந்தவர் அன்புசெல்வன் மகன் ரகுராஜா(22). இவர் திருச்செங்கோட்டில் தங்கி தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். நேற்று புல்லாகவுண்டம்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் நின்றிருந்த ரகுராஜாவை சந்தேகத்தின்பேரில் போலீசார் பிடித்து விசாரித்துபோது, 400 கிராம் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து, கைது செய்த எலச்சிபாளையம் எஸ்ஐ ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து திருச்செங்கோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கிளை சிறையில் அடைத்தார்.
The post கஞ்சா விற்ற வாலிபர் கைது appeared first on Dinakaran.