அதில் சுங்கத்துறை சோதனைக்கு ஒத்துழைப்பு அளிக்காததோடு, சுங்க அதிகாரிகளை மிரட்டவும் செய்தனர் என்று குறிப்பிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சென்னை விமான நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டதோடு, சுங்கத்துறை துணை ஆணையர் புகாரின் பேரில், 4 பேர் மீதும் சிஎஸ்ஆர் போட்டு, விசாரணைக்கு அழைக்கும் போது, காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையில் விடுவித்தனர். இதற்கிடையே சென்னை விமான நிலைய போலீசார், நேற்று முன்தினம் (புதன்கிழமை) ஏற்கனவே சுங்கத்துறை துணை ஆணையர் கொடுத்த புகாரின் பேரில், இலங்கை பயணி சலீம் உள்பட 4 பேர் மீதும் எப்ஐஆர் போட்டு வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்கள் மீது 121 (1), 351(1) உள்பட 7 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து சென்னை விமான நிலைய போலீசார், இவர்கள் 4 பேரையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
The post சுங்கத்துறை துணை ஆணையருக்கு மிரட்டல் இலங்கை பயணிகள் 4 பேர் கைது? appeared first on Dinakaran.