நெகிழவைக்கும் ‘கூடு’ கதை

தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு கிராமத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கப்படும் படம், ‘கூடு’. ஒரு கிராமத்தில் மின்சாரப் பெட்டியில் குருவி கூடு கட்டியதால், 35 நாட்கள் அக்குருவி குஞ்சு பொரித்து பறக்கும் வரை, மின்சாரம் இல்லாமல் வாழ்ந்த ஒரு கிராமத்து மக்களின் நெகிழ்ச்சியான சம்பவத்தை மையப்படுத்தி இப்படம் உருவாகிறது.

ஸ்கைமூன் எண்டர்டெயின்மெண்ட், ஏ எண்டர்டெயின்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் டைட்டில் லுக் மற்றும் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டது. டேவிட் வில்லியம்ஸ் கதை, திரைக்கதை எழுதுகிறார். ஜோயல் விஜய் இயக்குகிறார். எம்.கணேஷ், பி.கண்ணன் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் பணியாற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படுகிறது.

The post நெகிழவைக்கும் ‘கூடு’ கதை appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: