கடந்த ஜூன் 27ம் தேதிதொலைக்காட்சியொன்றில் நேரலையாக அதிபர் ஜோ பைடனுக்கும், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின்போது, பலமுறை பேச வார்த்தைகள் கிடைக்காமல் நீண்ட நேரம் யோசித்தது, புரியாமல் பேசியது, அர்த்தமில்லாமல் பதிலளித்தது போன்ற ஜோ பைடனின் தடுமாற்றங்கள், அவரால் இந்தத் தேர்தலில் மக்களின் வாக்குகளைப் பெற முடியுமா? என்ற கவலையை அவருடைய ஜனநாயகக் கட்சியினரிடையே ஏற்படுத்திவிட்டது. இதனையடுத்து, தான் அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக அதிபர் ஜோ பைடன் அறிவித்தார்.
அதன்பின் சிகாகோவில் நடைபெற்ற கட்சி மாநாட்டில் வருகிற அதிபர் தேர்தலின் வேட்பாளராகத் துணை அதிபர் கமலா ஹாரிஸை அறிவித்தார். இந்த நிலையில் டிரம்புக்கும், கமலா ஹாரிசுக்கும் இடையிலான தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், வாக்காளர்களை கவருவதற்காக விதவிதமான பிரசார யுக்திகளும் கையாளப்பட்டு வருகின்றன. டிரம்ப், கமலா ஹாரிசின் புகைப்படங்கள் அடங்கிய விளையாட்டு பொருட்கள், பொம்மைகள் தொடங்கி டி-சர்ட் என்று பல தளங்களிலும் வர்த்தகமும் சூடுபிடித்துள்ளது. உலகமே எதிர்பார்க்கும் அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெறுவாரா? கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவாரா? என்பது வரும் சில நாட்களில் தெரிந்துவிடும்.
The post அதிபர் தேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே உள்ளது; அமெரிக்க வாக்காளர்களை கவரும் பிரசார யுக்திகள்: டிரம்ப், கமலா ஹாரிஸ் ஆதரவாளர்கள் தீவிர ஆர்வம் appeared first on Dinakaran.