காசாவில் பள்ளிக்கூடம் மீது இஸ்ரேல் குண்டு மழை குழந்தைகள் உள்பட 16 பேர் பலி

டெய்ர் அல்-பலாஹ்: இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்தாண்டு தொடங்கிய போர் முடிவுறாமல் நீடிக்கிறது. இந்நிலையில் வடக்கு காசாவின் நுசிராத் பகுதியில் பள்ளிக்கூடம் மீது இஸ்ரேல் ராணுவம் நேற்று வான் வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் குழந்தைகள் உள்பட 16 பேர் பலியானதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த போரில் காசாவில் உள்ள ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக செயல்படும் லெபனானின் ஹிஸ்புல்லா படையினர் மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதன்ஒரு பகுதியாக தெற்க லெபனானில் யாட்டர் என்ற புறநகர் பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் நேற்று நடத்திய தாக்குதலில் ஒரு அதிகாரி உள்பட ராணுவ வீரர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர்.

The post காசாவில் பள்ளிக்கூடம் மீது இஸ்ரேல் குண்டு மழை குழந்தைகள் உள்பட 16 பேர் பலி appeared first on Dinakaran.

Related Stories: