×
Saravana Stores

இஸ்ரேல் பயணிகளை தாக்க இலங்கையில் சதித்திட்டம்: இந்தியா எச்சரிக்கையால் 3 பேர் கைது

கொழும்பு: இலங்கையில் இஸ்ரேல் நாட்டினர் மீது தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டிய சந்தேகத்தின் பேரில்3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இலங்கையின் கிழக்கு கடற்கரையோரத்தில் உள்ள சுற்றுலா தலம் அருகம்பை. இந்த பகுதிக்கு வெளிநாட்டினர் ஏராளமானோர் சுற்றுலா வருகின்றனர். இந்த சுற்றுலா தலத்தில் இஸ்ரேல் பிரஜைகளின் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்று கடந்த 7ம் தேதி இந்திய உளவுத்துறை இலங்கைக்கு தகவல் அனுப்பியது.

இந்த மாதம் 19ம் தேதியில் இருந்து 23ம் தேதிக்குள் அங்கு தாக்குதல் நடத்தப்படலாம் என இந்தியா எச்சரிக்கை விடுத்திருந்தது. இதையடுத்து இலங்கை போலீசின் தீவிரவாத தடுப்பு படை போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் சந்தேகத்திற்கு இடமான 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் ஈராக்கில் இருந்து வந்தவர் என இலங்கை போலீஸ் அதிகாரி தெரிவித்தார். இதற்கிடையே, இலங்கையில் அருகம்பைக்கு செல்லவேண்டாம் என்று அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து தூதரகம் தனது நாட்டு மக்களை கேட்டு கொண்டுள்ளது.

The post இஸ்ரேல் பயணிகளை தாக்க இலங்கையில் சதித்திட்டம்: இந்தியா எச்சரிக்கையால் 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Colombo ,Sri Lanka ,Arukambai ,India ,Dinakaran ,
× RELATED தீவிரவாத தாக்குதல் நடத்த வாய்ப்பு.....