×
Saravana Stores

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான வழக்கு புதுகை சப் கோர்ட்டுக்கு மாற்றம்: விசாரணை நவ.22க்கு ஒத்திவைப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரை சேர்ந்தவர் சி.விஜயபாஸ்கர் எம்எல்ஏ. முன்னாள் அமைச்சரான இவர், புதுக்கோட்டை மாவட்ட அதிமுக செயலாளராகவும் உள்ளார். அதிமுக ஆட்சியின்போது வருமானத்துக்கு அதிகமாக ரூ.35.79 கோடி சொத்து சேர்த்ததாக சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீது 2021 அக்டோபர் 17ம் தேதி புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வழக்கு விசாரணை, புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் 216 பக்க குற்ற பத்திரிக்கை கடந்தாண்டு மே மாதம் தாக்கல் செய்யப்பட்டது. அமர்வு நீதிமன்றத்தில் கடந்தாண்டு ஆகஸ்ட் 3ம் தேதி முதல் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்தநிலையில் இன்று 20வது முறையாக வழக்கு விசாரணைக்கு வந்தது. விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா ஆகியோர் ஆஜராகவில்லை. இவர்களது வக்கீல்கள் மட்டுமே ஆஜராகினர். இதையடுத்து, நீதிபதி சுபத்ராதேவி வழக்கை வரும் நவம்பர் 22ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். மேலும் இந்த வழக்கை புதுக்கோட்டை சப் கோர்ட்டுக்கு மாற்றி உத்தரவிட்டார்.

The post அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான வழக்கு புதுகை சப் கோர்ட்டுக்கு மாற்றம்: விசாரணை நவ.22க்கு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,minister ,C.Vijayabaskar ,Puducherry ,Pudukottai ,Ilupur ,Pudukottai district ,Ramya ,Dinakaran ,
× RELATED பைக்கில் மோதுவதுபோல் சென்றதால்...