×
Saravana Stores

தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம்!

சென்னை: தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 9 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக இன்று முதல் வருகிற 29-ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் பிற்பகல் 1 மணி வரை 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை மற்றும் விருதுநகர் ஆகிய 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம்! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Chennai Meteorological Department ,Tanjore ,Tiruvarur ,Nagapattinam ,Mayiladuthurai ,Pudukottai ,Ramanathapuram ,Thoothukudi ,Sivagangai ,Virudhunagar ,
× RELATED தமிழ்நாட்டில் 24ம் தேதி வரை மழை பெய்ய...