×
Saravana Stores

சென்னை அசோக்நகரில் உள்ள வைத்திலிங்கம் குடும்பத்துக்கு சொந்தமான 6 இடங்களில் 2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை

சென்னை: சென்னை அசோக்நகரில் உள்ள வைத்திலிங்கம் குடும்பத்துக்கு சொந்தமான 6 இடங்களில் 2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் உட்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்திருந்தது. லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்.

அமைச்சராக இருந்த போது கட்டுமான நிறுவனத்திடம் ரூ.28 கோடி லஞ்சம் பெற்றது தொடர்பாக, அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு சொந்தமான 13க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று அமலாக்கத்துறை (ஈடி) அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். இச்சோதனையில் வைத்திலிங்கம் தனது மனைவி மற்றும் மகன்கள் பெயரில் சட்டவிரோதமாக குவித்து வைத்திருந்த பல கோடி ரூபாய் சொத்துக்கான ஆவணங்கள், பத்திரங்கள், வங்கிப் பணப் பரிமாற்ற ஆவணங்கள் ஆகியவற்றை கைப்பற்றினர்.

சென்னையை பொருத்தவரையில், வைத்திலிங்கத்தின் சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள எம்எல்ஏ விடுதிக்கு நேற்று காலை 6 அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த வந்தனர். அப்போது வைத்திலிங்கத்தின் அறை பூட்டப்பட்டிருந்தது. உடனே அதிகாரிகள் விடுதியின் பொறுப்பார்களை தொடர்பு கொண்டு மாற்று சாவி வாங்கி சோதனை நடத்தினர். அதேபோல் தி.நகரில் உள்ள அவரது மகன் பிரபுவின் வீடு 5 பேர் கொண்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர். அசோக் நகர் 10வது அவென்யூரில் உள்ள மகன்கள் மற்றும் மகள் நடத்தும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட 6 நிறுவனங்கள் அமைந்துள்ள கட்டிடத்தில் சோதனை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் 10 பேர் வந்தனர். ஆனால் அலுவலக கட்டிடம் திறக்கப்பட வில்லை.

இதனால் 2 மணி நேரம் அதிகாரிகள் கட்டிடத்தின் முன்பு காத்திருந்தனர். பின்னர் கட்டிடத்தின் சாவி வந்த பிறகு அதிகாரிகள் 6 நிறுவனங்களிலும் தனித்தனி குழுக்கமாக சோதனை நடத்தினர். அதேபோல், ஆழ்வார்பேட்டை ராமசாமி சாலையில் வைத்திலிங்கத்திற்கு ரூ.27.90 கோடி பணம் கொடுத்த கட்டுமான குழுமத்திற்கு சொந்தமான ஸ்ரீராம் நிதி நிறுவனம், கோடம்பாக்கம் என்டிஆர் சாலையில் உள்ள ஸ்ரீராம் குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி கோடீஸ்வரி வீடு, தி.நகரில் உள்ள ஸ்ரீராம் கேபிட்டல் கார்ப்பரேட் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த நிலையில், சென்னை அசோக்நகரில் உள்ள வைத்திலிங்கம் குடும்பத்துக்கு சொந்தமான 6 இடங்களில் 2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

The post சென்னை அசோக்நகரில் உள்ள வைத்திலிங்கம் குடும்பத்துக்கு சொந்தமான 6 இடங்களில் 2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை appeared first on Dinakaran.

Tags : Vaithilingam ,Ashoknagar, Chennai. ,Chennai ,Enforcement Department ,Ashoknagar, Chennai ,Adimuga ,minister ,Department of Anti-Bribery ,
× RELATED சென்னை அசோக்நகரில் உள்ள...