அந்த சிறப்பு ரயிலுக்கான நேரம், இடம் தொடர்பான விவர பட்டியலையும் தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து போத்தனூருக்கு அக்.29, நவ.2-ம் தேதிகளில் அதிவிரைவு ரயில் இயக்கப்படும். கோவையில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு அக்.31, நவ.4-ம் தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும். மங்களூருவில் இருந்து சென்னை எழும்பூருக்கு அக்.29-ம் தேதி அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்படும். சென்னை எழும்பூரில் இருந்து மங்களூருவுக்கு அக்.30-ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
The post தீபாவளி பண்டிகையை ஒட்டி கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.