நெல்லையில் இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவி மீது மாடு மோதி விபத்து: உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

நெல்லை: நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட திருமால் நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவி மீது, அங்கே சுற்றித் திரிந்த மாடு மோதியதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சமீப காலமாக சாலைகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் மாடுகள் சுற்றி திரிகின்றன. இதனால், பல்வேறு தெருக்கள் வழியாக நடந்து செல்பவர்களும், பைக்கில் செல்பவர்களும் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். ஒருசில நேரங்களில் பைக்கில் செல்பவர்கள் மாடுகள் மீது மோதி விபத்தில் சிக்கி படுகாயமடைந்து உயிரிழப்புகள் நிகழ்கிறது. இதற்கு மாநகராட்சி தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக அபராதம் விதிப்பது, சுற்றித்திரியும் மாடுகளை சிதைப்பிடிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், திருமால் நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவி மீது மாடு மோதிய விபத்தில் படுகாயங்களுடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொதுமக்கள் அதிகம் செல்லக்கூடிய நெரிசலான இடங்களில், மாடுகள் ஆங்காங்கே சுற்றி திரிவது போக்குவரத்துக்கு பெரும் இடையூறாக இருப்பதாக மக்கள் புகார் தெரிவித்தனர். சாலைகளில் திரியும் மாடுகளால், தொடர் விபத்துகள் ஏற்படுவது வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக இதில் கவனம் செலுத்தி, மாட்டின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

The post நெல்லையில் இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவி மீது மாடு மோதி விபத்து: உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: