×
Saravana Stores

இடியுடன் பெய்த கனமழை

போச்சம்பள்ளி, அக். 23: போச்சம்பள்ளி பகுதியில் கடந்த இரு நாட்களாக பகலில் வெயிலும், இரவில் கனமழையும் பெய்து வருவது வாடிக்கையாக உள்ளது. நேற்று காலை முதலே வெயில் சுட்டெரித்த நிலையில், மதியம் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பகல் 2 மணிக்கு மேல் திடீரென இடி மின்னலுடன் கனமழை பெய்யதது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் விடாது மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகினர்.

The post இடியுடன் பெய்த கனமழை appeared first on Dinakaran.

Tags : Bochampalli ,Dinakaran ,
× RELATED போச்சம்பள்ளியில் கார் கவிழ்ந்து வாலிபர் பலி