×
Saravana Stores

சிறுமி கர்ப்பம் வாலிபர் கைது

நெய்வேலி, அக். 23:  குறிஞ்சிப்பாடி பகுதியில் பாட்டி வீட்டில் வசித்து வரும் சிறுமிக்கு கடந்த 20ம் தேதி உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி ஒன்றரை மாதம் கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பாட்டி நெய்வேலி நகர அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் குறிஞ்சிப்பாடி கேசவ நாராயணபுரம் அம்பேத்கர் பகுதியை சேர்ந்த மாயவன் மகன் சிண்டாக் (எ) பழனிசாமி (33) சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி பலாத்காரம் செய்தது தெரிந்தது. இதனையடுத்து பழனிசாமியை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

The post சிறுமி கர்ப்பம் வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Neyveli ,Kurinchipadi ,Chidambaram ,Raja Muthiah Hospital ,
× RELATED 5 லட்சம் பனை விதை நடும் பணி விறுவிறுப்பு