×
Saravana Stores

சிறுமிக்கு பாலியல் தொல்லை முதியவர்க்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே கீழ்கதிர்பூர் பகுதியை சேர்ந்தவர் குமார் (58). இவர் இதே பகுதியில் மாவுமில் நடத்தி வருகின்றார். கடந்த 2022-ம் ஆண்டு குமார் கடைக்கு இட்லி மாவு அரைக்க வந்த 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் குற்றவாளி குமாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு  தமிழக அரசு இழப்பீடாக ரூ.3 லட்சம் வழங்கவும் நீதிபதி ஆணையிட்டுள்ளார்.

The post சிறுமிக்கு பாலியல் தொல்லை முதியவர்க்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Kumar ,Talkadirpur ,
× RELATED இலவச மருத்துவ முகாம்