×
Saravana Stores

பூந்தமல்லியில் ரத்ததான முகாம்

பூந்தமல்லி: பூந்தமல்லி கண்டோன்மென்ட் பகுதி தமிழ்நாடு தவ்ஹித் ஜமா அத் கிளை மற்றும் திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனை சார்பில் பூந்தமல்லியில் நேற்று முன்தினம் ரத்த தான முகாம் நடைபெற்றது. பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற இந்த இரத்ததான முகாமில் மாவட்ட மருத்துவ அணி ஹாமீம் தலைமை தாங்கினார்.

இதில் திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனை இரத்தவங்கி பொறுப்பாளர் பிரதீபா, தமிழ்நாடு தவ்ஜித் ஜமா அத் அமைப்பின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொருளாளர் சலீம் மற்றும் கிளை தலைவர் ஜாகீர் உசேன் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ரத்த தானம் செய்தனர். விபத்து மற்றும் மகப்பேறு காலம், உயிர் காக்கும் சிகிச்சை போன்ற நேரங்களில் ரத்தத்தின் தேவை அதிகம் இருப்பதால் அப்போது ரத்ததானம் மூலம் பெறப்பட்ட ரத்தம் பயனுள்ளதாக இருக்கும் என்று நிகழ்ச்சியில் ரத்ததானம் செய்தவர்கள் தெரிவித்தனர்.

The post பூந்தமல்லியில் ரத்ததான முகாம் appeared first on Dinakaran.

Tags : Ratadhana camp ,Poontamalli ,Poontamalli Cantonment ,Tamil Nadu ,Tawhit Jama'at ,Branch ,Tiruvallur Government General Hospital ,Poontamalli Government Hospital ,
× RELATED பராமரிப்பின்றி பாசிபடர்ந்த கோயில் குளம்: தூர்வாரி சீரமைக்க கோரிக்கை