×
Saravana Stores

சீனியாரிட்டி பற்றி எதிர்க்கட்சித் தலைவர் பேசுவதா?: எடப்பாடி பழனிசாமிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதில்

சென்னை: எடப்பாடி பழனிசாமி என்னைப் பற்றி கருத்து சொல்ல சுதந்திரம் உண்டு என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; ஜெயலலிதா மறைவுக்கு பிறகு மூத்த தலைவர்களை தாண்டி பழனிசாமி எப்படி முதல்வர் ஆனார்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆன கதையெல்லாம் அனைவரும் அறிந்ததே.

மற்றவர்களை விமர்சிப்பதற்கு முன் தனது நிலையை எடப்பாடி பழனிசாமி உணர்ந்து பேச வேண்டும். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் தான் முதல்வராக வருவார் என கூறப்பட்டது. செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் போன்ற மூத்த தலைவர்களையெல்லாம் புறந்தள்ளி, இபிஎஸ் எப்படி முதல்வரானார்?. மேலும், எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க கூவத்தூரில் நடந்தவற்றையெல்லாம் மக்கள் அறிவார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post சீனியாரிட்டி பற்றி எதிர்க்கட்சித் தலைவர் பேசுவதா?: எடப்பாடி பழனிசாமிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதில் appeared first on Dinakaran.

Tags : Deputy Chief Minister ,Udayanidhi Stalin ,Edappadi Palaniswami ,Chennai ,Chennai airport ,Jayalalitha ,Udhayanidhi Stalin ,
× RELATED அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி...