கழிவு நீர் லாரி மோதி, கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழப்பு

சென்னை: சென்னை அக்கரையில் கழிவு நீர் லாரி மோதி, கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். விதிமுறையை மீறி எதிர் திசையில் வந்த பைக்கிற்கு வழிவிட வலது பக்கம் நகர்ந்த போது பின்னால் வந்த கழிவுநீர் லாரி மோதியது. மாணவி பரிதாபமாக உயிரிழந்த நிலையில், உடன் வந்த மாணவன் அதிர்ஷ்டவசமாக தப்பினார். உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

The post கழிவு நீர் லாரி மோதி, கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: