ரஷ்யா மீது உக்ரைன் ஏவுகணை மழை

கிவ்: இஸ்ரேல் – ஹமாஸ் போரை போல் முடிவின்றி நீடிக்கும் போர் உக்ரைன் – ரஷ்யா போர். 3 ஆண்டுகளை கடந்து நீடிக்கும் இந்த போரில் அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்பதும் தொடர் கதையாக நீடிக்கிறது. இதன் தொடர்ச்சியாக ரஷ்யா மீது உக்ரைன் ராணுவம் நேற்று முன்தினம் 100 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் வெடிமருந்து தயாரிப்பு தொழிற்சாலைக்கு அருகே நிஸ்னி நோவ்கோரட் பகுதியில் உள்ள டிஜெர்ஜின்ஸ்க் நகர் மீது உக்ரைனின் ஆளில்லா விமானங்கள் தாக்குதல் நடத்தி உள்ளன.

இதேபோல் ஒரேஇரவில் ரஷ்யாவின் ஏழு பிராந்தியங்கள் மீது உக்ரைன் ராணுவத்தின் ஆளில்லா விமானங்கள் தாக்கின. அதில் 110 ஆளில்லா விமானங்களை ரஷ்யா சுட்டு வீழ்த்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. போர் தொடங்கிய நாளிலிருந்து ரஷ்யா மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய வான்வழி தாக்குதல் இது என கூறப்பட்டுள்ளது. இதற்கு பதிலடி தரும் விதமாக உக்ரைனின் கிய்வ் மீது நேற்று ரஷ்யா 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் 17 பேர் காயமடைந்தனர்.

The post ரஷ்யா மீது உக்ரைன் ஏவுகணை மழை appeared first on Dinakaran.

Related Stories: