×
Saravana Stores

தமிழ் மொழிக்கு எதிராக ஆர்.என்.ரவி செயல்படுகிறார்: ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு

சென்னை:மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கை: தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடும் போது திராவிட நல் திருநாடும் என்கிற வார்த்தையை நீக்கிவிட்டுப் பாடி இருக்கிறார்கள். ஏற்கனவே பொதிகை என்ற பெயரில் செயல்பட்ட தொலைக்காட்சி டிடி தமிழ் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இந்த தொலைக்காட்சி தமிழ் மொழியின் மேன்மைக்காக இதுவரை சிறப்பு மாதத் தொடர் நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தியதாகத் தெரியவில்லை. ஆனால் இந்தி மொழிக்கு ஒரு மாதம் முழுவதும் விழா எடுத்திருப்பது தமிழ் மொழியை அவமானப்படுத்தும் செயலாகும். நெடிய வரலாறு தமிழ்த் தாய் வாழ்த்துக்கு இருக்கிறது. அதனை அரைகுறையாகப் பாடுவது தமிழர்களையும் தமிழ்நாடு அரசையும் அவமானப்படுத்தும் செயலாகும்.

தமிழ்நாட்டின் ஆளுநர் ஏற்கனவே தமிழ்நாடு அரசின் நீண்ட காலச் சிறைவாசிகளின் முன் விடுதலைக்கான பரிந்துரையை ஏற்று கையெழுத்து விடாமல் மறுத்ததற்காக நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு உள்ளாகி இருக்கிறார். தமிழ் மொழிக்கும் அரசின் செயல் நெறிமுறைகளுக்கும் எதிராக தொடர்ந்து செயல்படும் தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாகப் பதவி விலக வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post தமிழ் மொழிக்கு எதிராக ஆர்.என்.ரவி செயல்படுகிறார்: ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : RN ,Ravi ,Jawahirullah ,CHENNAI ,President of the ,Humanist People's Party ,Prof. ,MH ,Dravida Naal Tirunadum ,Potikai ,DD ,RN Ravi ,
× RELATED பகுதிநேர ஆசிரியருக்கு தீபாவளிக்கு...