×
Saravana Stores

பணியின் போது உயிர் நீத்த காவலர்களுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் இன்று அஞ்சலி

சென்னை:இந்தியா – சீனா போரின் போது, கடந்த 1959ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி திடீரென சீனா நடத்திய தாக்குதலில் 10 ரிசர்வ் படை வீரர்கள் உயிரிழந்தனர். அக்டோபர் 21ம் தேதி, நாடு முழுவதும் காவலர் வீரவணக்க நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றனர். காவலர்களின் உயிர் தீயாகத்தை போற்றும் வகையில், சென்னை மயிலாப்பூரில் உள்ள தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் நினைவு தூண் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நினைவு தூண் முன்பு இன்று காலை 8 மணிக்கு தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார். அதை தொடர்ந்து சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அருண், சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளிட்ட காவல் துறை உயர் அதிகாரிகள், துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்த உள்ளனர்.

The post பணியின் போது உயிர் நீத்த காவலர்களுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் இன்று அஞ்சலி appeared first on Dinakaran.

Tags : DGP ,Shankar Jiwal ,Chennai ,India-China war ,China ,Police Valor Day ,
× RELATED வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்து...