24ம் தேதி சீர்மரபினர் நலவாரிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்

 

விருதுநகர், அக்.19: விருதுநகர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட தகவல்: சீர்மரபினர் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு விபத்து ஈட்டுறுதி திட்டத்தில் உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை, ஈமச்சடங்கு உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, மூக்கு கண்ணாடி செலவுத்தொகை ஈடு செய்தல், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் கடந்த 2008 முதல் வழங்கப்படுகிறது.

நலத்திட்ட உதவிகள் பெற சீர்மரபினர் இனத்தை சேர்ந்த 18 முதல் 60 வயதிற்கு மேல்படாத அமைப்பு சாரா நிறுவனங்களில் பணிபுரியாத குடும்பத்தில் ஒருவர் இந்த வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து நலத்திட்ட உதவிகள் பெறலாம். ஏற்கனவே உறுப்பினராக பதிவு செய்தோர் தங்களது உறுப்பினர் பதிவை புத்துப்பிக்க, புதுப்பிக்க தவறிய உறுப்பினர்களை மீள வாரியத்தில் பதிவு செய்து கொள்ள, புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை அதிகப்படுத்துதல் நலத்திட்ட உதவிகள் கோரும் மனுக்கள் முகாம் விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அக்.24 காலை 11 முதல் 5 மணி வரை நடைபெற உள்ளது. சீர்மரபினர் இனத்தினர் முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.

The post 24ம் தேதி சீர்மரபினர் நலவாரிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் appeared first on Dinakaran.

Related Stories: