பெருமழை பெய்த 16, 17 இரு நாட்களிலும் நிவாரண முகாம்களின் மூலம் 14.60 லட்சம் பேருக்கு உணவு

சென்னை: பெருமழை காரணமாக அக்டோர் 16, 17 இரண்டு நாட்களிலும் நிவாரண முகாம்களில் 14.60 லட்சம் பேருக்கும், அம்மா உணவகங்கள் மூலம் 1.28 லட்சம் பேருக்கும் உணவு வழங்கப்பட்டதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை மாநகரை அச்சுறுத்திய சிவப்பு எச்சரிக்கை மழை அறிவிப்பை தொடர்ந்து சென்னை மாநகரிலுள்ள அம்மா உணவகங்களில் 16, 17 ஆகிய இரண்டு நாட்களில் கட்டணமின்றி உணவு வழங்கப்படும் என அறிவித்தார்.

அதன்படி, அம்மா உணவகங்களில் 16.10.2024 (நேற்று முன்தினம்) அன்று காலை, மாலை 2 வேளையும் 78,557 பேர் கட்டணமில்லா உணவினைப் பெற்றுப் பயனடைந்தனர். அதேபோல, மாலையில் 29,316 ஏழைகளுக்கு சப்பாத்தி உணவு வழங்கப்பட்டது. அம்மா உணவகங்களில் கட்டணமில்லா உணவு வழங்க உத்தரவு பிறப்பித்து எங்களுக்கு உதவிபுரிந்த முதல்வருக்கு மனதார நன்றியைத் தெரிவிக்கிறோம் என்று கட்டணமில்லா உணவு சாப்பிட்ட மக்கள் கூறினர்.

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும், மற்ற அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று நிவாரணப் பொருட்களை வழங்கினார்கள். குறிப்பாக முதல்வர், புளியந்தோப்பு பகுதியில் ஆய்வு மேற்கொண்டு அங்கு பணி மேற்கொண்டிருந்த சென்னை மாநகராட்சி முன்களப் பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஊக்கமளித்தார்.

மழையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மொத்தம் 2 நாட்களிலும் 14,84,735 பேருக்கு உணவு விநியோகிக்கப்பட்டது. சென்னை மாநகரம் முழுவதிலும் 304 மழைக்கால மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, அவற்றில் 17,471 பேருக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

The post பெருமழை பெய்த 16, 17 இரு நாட்களிலும் நிவாரண முகாம்களின் மூலம் 14.60 லட்சம் பேருக்கு உணவு appeared first on Dinakaran.

Related Stories: