×

கோழி திருடிய இருவர் கைது

திருப்புத்தூர், அக். 17: திருப்பத்தூர் சின்னத்தோப்பு தெருவை சேர்ந்தவர் ராஜா முகமது மகன் அப்துல் ரகுமான் (27). இவர் தம்பிபட்டி பைபாஸில் தோட்டம் அமைத்து அதில் நாட்டுக்கோழி வளர்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அங்கு வந்த இருவர் தோட்டத்தில் பொருந்திய கேமராவை உடைத்து விட்டு அங்கிருந்த கோழிகளில் 5 நாட்டுக் கோழிகளை திருடி சென்றுள்ளனர். நேற்று காலை தோட்டத்துக்கு வந்த அப்துல் ரகுமான் அங்கிருந்த மற்றொரு கேமராவை பார்த்தபோது, இரவில் இருவர் கோழி திருடியது தெரியவந்தது. இதுகுறித்த புகாரில், திருப்புத்தூர் நகர் போலீசார் கோழிகளை திருடிய திருப்புத்தூர் காளையப்பா நகரைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணன் (35) மற்றும் அமராவதிபுதூர் பகுதி கல்லுப்பட்டியைசேர்ந்த ஆனந்த் (29) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.

The post கோழி திருடிய இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Tiruputhur ,Abdul Rahman ,Raja Mohammad ,Chinnathoppu Street, Tirupathur ,Thambipatti Bypass ,Dinakaran ,
× RELATED திருப்புத்தூர் சாலை விபத்தில் முதியவர் பலி; 3 பேர் படுகாயம்