×

இடிந்துவிழுந்த வீட்டில் சிக்கிய கர்ப்பிணி உள்ளிட்ட 3 பேரை பத்திரமாக மீட்ட போலீசார்

பெரம்பூர்: வீடு இடிந்துவிழுந்தபோது கட்டிட இடிபாடுகளில் சிக்கிய கர்ப்பிணி உள்பட 3 பேரை போலீசார் பத்திரமாக மீட்டனர். சென்னையில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. ராஜமங்கலம் பகுதியில் நேற்றிரவு பெய்த மழையின் காரணமாக ராஜாஜி நகர் 2வது தெருவில் உள்ள வீடு மிகவும் மோசமாக இருந்ததால் வீட்டில் இருந்தவர்கள் முன்னெச்சரிக்கையாக சில நாட்களுக்கு முன் அந்த வீட்டில் இருந்து சென்றுவிட்டனர். நேற்று மாலை 4 மணி அளவில் திடீரென அந்த வீடு இடிந்து விழுந்ததால் பக்கத்து வீட்டின் படிக்கட்டுகள் உடைந்து சேதம் அடைந்தது.

அந்த வீட்டில் முதல் தளத்தில் வசித்துவந்த 5 மாத கர்ப்பிணி மீனலோட்சினி (29), இவரது தாய் சாந்தி (51) மற்றும் ஒருவர் ஆகிய 3 பேர் இடிபாடுகளில் சிக்கி தவித்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்க முடியவில்லை. இதுபற்றி தகவல் கிடைத்ததும் ராஜமங்கலம் இன்ஸ்பெக்டர் மூர்த்தி தலைமையில் போலீசார் சென்று கர்ப்பிணி உள்பட மூவரையும் பத்திரமாக மீட்டு வெளியே அழைத்துவந்தனர். பின்னர் அவர்களது உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

The post இடிந்துவிழுந்த வீட்டில் சிக்கிய கர்ப்பிணி உள்ளிட்ட 3 பேரை பத்திரமாக மீட்ட போலீசார் appeared first on Dinakaran.

Tags : Perambur ,Chennai ,Rajamangalam ,street ,Rajaji Nagar ,
× RELATED பெரம்பூர், வியாசர்பாடி சுந்தரம்...