×

தக்காளி, பீன்ஸ், அவரைக்காய் விலை பாதியாக குறைந்துள்ளது

அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு முழுவதும் இருந்து காய்கறிகள் வருகின்றன. நேற்று கனமழை மற்றும் வரத்து குறைவு காரணமாக மார்க்கெட்டில் அனைத்து காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. தக்காளி, பீன்ஸ், அவரைக்காய் விலை மேலும் உயர்ந்துள்ளது. இந்த நிலையில், இன்று காலை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சென்னை மற்றும் புறநகரில் இருந்து சில்லரை வியாபாரிகள், பொதுமக்கள் வருகை குறைந்ததால் அனைத்து காய்கறிகள் விலை மேலும் குறைந்துள்ளது. இதன்படி, நேற்று 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி, இன்று காலை 80க்கு விற்பனை செய்யப்பட்டது. இதுபோல், ஒரு கிலோ பீன்ஸ் 250 ரூபாயில் இருந்து 150 க்கும் அவரைக்காய் 100 ரூபாயில் இருந்து 80 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதுதவிர, ஒரு கிலோ வெங்காயம் 50 க்கும் சின்ன வெங்காயம் 70 க்கும் உருளைகிழங்கு 45 க்கும் கேரட் சவ்சவ், கத்தரிக்காய் 30 க்கும் பீட்ரூட், முட்டை கோஸ், பாவற்காய், முள்ளங்கி, புடலங்காய், காலிபிளவர், வெண்டைக்காய் 40 க்கும் முருங்கைகாய், பச்சை மிளகாய் மற்றும் நூக்கல் 60 க்கும் பட்டாணி 250 க்கும் இஞ்சி 170 க்கும் பூண்டு 350 க்கும் எலுமிச்சை பழம் 120 க்கும் கோவைக்காய், கொத்தவரங்காய் 35 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கோயம்பேடு மார்க்கெட் சிறு, மொத்த வியாபாரிகள் தலைவர் எஸ்.எஸ். முத்துகுமார் கூறுகையில், ‘‘நேற்று பெய்த கனமழையால், வரத்து குறைவால் மார்க்கெட்டில் அனைத்து காய்கறிகள் விலை உயர்ந்தது. இன்று காலை சில்லறை வியாபாரிகள், பொதுமக்கள் வருகை குறைந்ததால் அனைத்து காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. தக்காளி, பீன்ஸ், அவரைக்காய் விலைகள் குறைந்துள்ளது’’ என்றார்.

The post தக்காளி, பீன்ஸ், அவரைக்காய் விலை பாதியாக குறைந்துள்ளது appeared first on Dinakaran.

Tags : Annanagar ,Chennai ,Koyambedu ,Andhra Pradesh ,Kerala ,Karnataka ,Maharashtra ,Tamil Nadu ,
× RELATED கோயம்பேட்டில் சாலை ஆக்கிரமித்த ஆம்னி பஸ்களுக்கு அபராதம்