×

அரசு மேற்கொண்ட மழைநீர் வடிகால் பணிகள் கைகொடுத்துள்ளன: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை: அரசு மேற்கொண்ட மழைநீர் வடிகால் பணிகள் கைகொடுத்துள்ளன என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். ரேஸ் கோர்ஸ் நிலம் அரசின் வசம் வந்துள்ள நிலையில் அங்கு நடைபெறும் குளம் அமைக்கும் பணியை பார்வையிட்டார். இதனை தொடர்ந்து சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெறும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

இதனை தொடர்ந்து சென்னை பள்ளிக்கரணையில் நாராயணபுரம் ஏரியை ஆய்வு செய்த பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது; அரசு மேற்கொண்ட மழைநீர் வடிகால் பணிகள் கைகொடுத்துள்ளன என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த 3 மாதங்களாகவே சென்னையில் மழை நீர் வடிகால் பணிகளை மேற்கொண்டோம். வெள்ள பாதிப்பில் இருந்து நிரந்தரமான தீர்வு சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களுக்கு விரைவில் கிடைக்கும் எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

The post அரசு மேற்கொண்ட மழைநீர் வடிகால் பணிகள் கைகொடுத்துள்ளன: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Mu. K. ,Stalin ,Chennai ,MLA ,K. Stalin ,Chennai Kindi ,Course Area ,Chief Minister MLA K. Stalin ,
× RELATED அரசின் முயற்சியால் தொழிலாளர்களின்...