×

தண்டவாளத்தில் தவறி விழுந்து குமரி ராணுவ வீரர் பலி

* விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பிய போது சம்பவம்

அருமனை : விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பிய குமரி ராணுவ வீரர் ரயில் தண்டவாளத்தில் தவறி விழுந்து இறந்தார். இடைக்கோடு அருகே மாலைக்கோடு சாமவிளையை சேர்ந்தவர் பகீர் ராஜ் (38). 2004ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்து பணிபுரிந்து வந்தார். தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் பணியில் இருந்த இவர், ஒரு மாத விடுமுறையில் ஊருக்கு வந்தார். விடுமுறை முடிந்து மீண்டும் பணிக்கு திரும்ப முடிவு செய்தார். அதன்படி கடந்த 10ம் தேதி இரவு சுமார் 12 மணி அளவில் ரயிலில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தார்.

ராஜஸ்தான் பகுதியில் இருந்து பொக்ரான் பகுதிக்கு செல்லும் ரயிலில் ஏற முயன்ற போது தவறி தண்டவாளத்தில் விழுந்து உள்ளார். உடனடியாக அவரை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி பகீர் ராஜ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அவரது குடும்பத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.பகீர் ராஜுக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. மனைவி மற்றும் 5ம் வகுப்பு, 1ம் வகுப்பு படிக்கும் 2 மகன்கள் உள்ளனர். பணிக்கு திரும்பிய போது ராணுவ வீரர் விபத்தில் இறந்தது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவருடைய உடல் நாளை சொந்த ஊருக்கு எடுத்து வரப்பட்டு, ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது.

The post தண்டவாளத்தில் தவறி விழுந்து குமரி ராணுவ வீரர் பலி appeared first on Dinakaran.

Tags : Bakir Raj ,Samawlaya ,Malaikh ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை 84% கூடுதலாக பெய்துள்ளது