மாநில நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டை ஒன்றிய அரசு தொடர்ந்து புறக்கணிப்பதா?ஜவாஹிருல்லா கண்டனம்

சென்னை: மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு நிதிப் பகிர்வாக ரூ.1,78,173 கோடியை ஒன்றிய அரசு விடுவித்தது. அக்டோபர் மாதம் வழங்க வேண்டிய தொகையுடன் கூடுதல் தவணையாக ரூ.89,086 கோடியை ஒன்றிய அரசு விடுவித்துள்ளது.

தமிழ்நாட்டிற்கு வெறும் ரூ.7,268 கோடியை மட்டுமே ஒன்றிய அரசு ஒதுக்கி இருக்கிறது. தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா ஆகிய தென்னிந்திய மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த நிதி ரூ.28,152 கோடி தான். இதை விட உத்தரப்பிரதேசம் என்ற ஒரு மாநிலத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ள நிதி அதிகமாகும்.

ஏற்கனவே கல்விக்கு வழங்க வேண்டிய தொகையை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்திருக்கிறது. இந்த மாத ஊதியத்தை வழங்க இயலாமல் தமிழ்நாடு அரசு 10 நாட்கள் தாமதமாக ஆசிரியர்களுக்கான ஊதியத்தை விடுவித்து இருக்கிறது. ஜிஎஸ்டி வரி மூலம் மிக அதிகமாக ஒன்றிய அரசுக்கு வருவாயை வழங்கும் தமிழ்நாட்டிற்கு மிகக் குறைந்த நிதியை ஒதுக்கீடு செய்து நிதி கூட்டாட்சியைச் சிதைக்கும் ஒன்றிய அரசை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

The post மாநில நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டை ஒன்றிய அரசு தொடர்ந்து புறக்கணிப்பதா?ஜவாஹிருல்லா கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: