இந்த உத்தரவை எதிர்த்து, மனைவி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, விவாகரத்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டால் நிவாரணம் கோர முடியாது என்று உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் தெளிவுபடுத்தியுள்ளது. அதே நேரத்தில், குடும்ப வன்முறை தடைச் சட்டத்தின் கீழ், குடும்ப நல நீதிமன்றமும், உரிமையியல் நீதிமன்றமும் நிவாரணம் வழங்குவதற்கு உத்தரவிட சட்டத்தில் இடம் உள்ளது. அதன்படி கீழமை நீதிமன்றம், மனைவிக்கான இழப்பீட்டை நிர்ணயிக்கலாம் என்று உத்தரவிட்டார்.
The post விவாகரத்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டாலும் கணவரிடம் இருந்து மனைவி நிவாரணம் கோரலாம்: ஐகோர்ட் தீர்ப்பு appeared first on Dinakaran.