×

சிதம்பரம் நடராஜர் கோயில் நிலங்களை மீட்க நடவடிக்கை: கடலூர் கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் ராதாகிருஷ்ணன் என்பவர் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ‘சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும், புதுச்சேரியில் காரைக்கால் மாவட்டத்திலும், 3 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளது. இந்த நிலங்களை பொது தீட்சகர்கள், முறையாக பராமரிக்கவில்லை என்பதால் அவற்றை மீட்டு பாதுகாக்க வேண்டும். இதுதொடர்பாக முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பி உள்ளேன்.

அந்த புகார் கடலூர் கலெக்டருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், மாவட்ட கலெக்டர் விசாரணை கூட்டம் கூட்டிய போதும், அதன்பின் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்க உத்தரவிட வேண்டும்’ என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி தண்டபாணி, ‘சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமாக, கடலூர் மற்றும் புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டங்களில் உள்ள நிலங்களை மீட்பது தொடர்பாக விசாரணை நடத்தி, 12 வாரத்திற்குள் நிலத்தை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’ என்று கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார்.

 

The post சிதம்பரம் நடராஜர் கோயில் நிலங்களை மீட்க நடவடிக்கை: கடலூர் கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chidambaram Nataraja Temple ,Cuddalore Collector ,Chennai ,Chennai High Court ,Cuddalore District Collector ,Radhakrishnan ,Madras High Court ,Chidambaram ,Nataraja ,Cuddalore ,
× RELATED வருமானம், செலவு கணக்கு விவரம் தர தீட்சிதர்களுக்கு ஆணை