உடனடியாக பண்ணையில் இருந்த முதலைகளும் வேறு இடத்திற்கு கொண்டு செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவ்வாறு செய்ய முடியவில்லை. எனவே மக்களுக்கு தீங்கு ஏற்படக் கூடாது என்பதற்காக, வனத்துறை அதிகாரிகளின் ஆலோசனைப்படி பண்ணையில் இருந்த 125 முதலைகளை கொல்ல முடிவு செய்யப்பட்டது. அதன்படி 125 முதலைகளின் மீதும் மின்சாரத்தை பாய்ச்சி கொன்றனர். இந்நிலையில் அந்த பண்ணையில் இன்னும் 500 குட்டி முதலைகள் உள்ளன. அவை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டதாக வனத்துறையினர் கூறினர். மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க தனது 125 முதலைகளை மின்சாரம் பாய்ச்சி கொன்ற பண்ணையாளர் நத்தபாக்கை பலரும் பாராட்டி வருகின்றனர்.
The post மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க 125 முதலைகளை மின்சாரம் பாய்ச்சி கொன்ற பண்ணையாளர்: தாய்லாந்தில் விநோதம் appeared first on Dinakaran.