துபாய்: உலகில் அதிகம் பேர் கொண்டாட கூடிய பண்டிகைகளில் முக்கிய பண்டிகையான தீபாவளி உலகெங்கும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தீபாவளியையோட்டி துபாயில் இந்தியர்கள் அதிகம் வசிக்ககூடிய பர் துபாய் பகுதியில் தீபாவளியை கொண்டாடியவர்கள் தங்கள் வீடுகளை வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்திருந்தனர்.
இதனால் அப்பகுதியில் உள்ள வீடுகள் வண்ண விளக்குகளால் ஜொலித்தது.தீபாவளியையோட்டி கடைகளில் சிறப்பு இனிப்பு வகைகள் விற்பனை செய்யப்பட்டது.உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சந்தித்து ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.