மினிபஸ் கவிழ்ந்து 4 பேர் பரிதாப பலி

ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரத்தில் இருந்து நேற்று காலை மினிபஸ் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு புறப்பட்டு சென்றது. பஸ்சை டிரைவர் மித்தீஸ்(45) ஓட்டி வந்தார். காந்திநகர் அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த மினி பஸ், சாலையோர முட்புதரில் கவிழ்ந்தது. இதில் பஸ்சின் அடியில் சிக்கி மாணவர்கள் நிதீஷ்குமார்(17), வாசுராஜ்(15), சதீஷ்குமார்(20), லேப் டெக்னீசியன் மாடசாமி(28) ஆகியோர் உயிரிழந்தனர். 11 சிறுமிகள், 6 சிறுவர்கள், 8 பெண்கள் உள்பட 31 பேர் காயமடைந்தனர். உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித் துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி அளித்து உத்தரவிட் டுள் ளார்.

The post மினிபஸ் கவிழ்ந்து 4 பேர் பரிதாப பலி appeared first on Dinakaran.

Related Stories: