×

இன்று நடைபெறும் திமுக பவள விழாவில் திமுக மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள் பங்கேற்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் இன்று நடைபெறும் திமுக பவள விழா பொதுக்கூட்டத்தில், திமுக மற்றும் அதன் தோழமை கட்சி நிர்வாகிகள் பங்கேற்கவுள்ளனர். திமுக ஆரம்பித்து 75 ஆண்டுகள் நிறைவானதை முன்னிட்டு, அதன் பவளவிழா பொதுக்கூட்டம் காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில், பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தலைமை தாங்குகிறார். காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளரும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சருமான தா.மோ.அன்பரசன் முன்னிலை வகிக்கிறார்.

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ வரவேற்று பேசுகிறார். கூட்டத்தில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்கு சிறப்புரையாற்றுகிறார்.இதில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கு.செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் கே.எம்.காதர்மொய்தீன்,

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, கொங்கு நாடு தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன், மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஜி.எம்.ஸ்ரீதர் வாண்டையார், தமிழ்நாடு விவசாய தொழிலாளர் கட்சி தலைவர் பொன்.குமார், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், மக்கள் விடுதலை கட்சி தலைவர் முருகவேல்ராஜன்,

மனித நேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி, முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் கருணாஸ், ஆதித்தமிழர் பேரவை கட்சி தலைவர் அதியமான், தமிழ்மாநில தேசிய லீக் தலைவர் திருப்பூர் அல்தாப், பார்வார்டு பிளாக் கட்சி நிறுவன தலைவர் பி.என்.அம்மாவாசி ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்க உள்ளனர்.முடிவில், காஞ்சிபுரம் மாநகர திமுக செயலாளர் சி.கே.வி.தமிழ்செல்வன் நன்றி கூறுகிறார்.

இந்த, மாபெரும் பொதுக்கூட்டத்தை மாநாடுபோல நடத்துவதற்கான ஏற்பாடுகளை காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளரும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சருமான தா.மோ.அன்பரசன், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளரும், உத்திரமேரூர் எம்எல்ஏவுமான க.சுந்தர் மற்றும் காஞ்சி வடக்கு, தெற்கு மாவட்ட திமுகவினருடன் இணைந்து செய்துள்ளனர்.

The post இன்று நடைபெறும் திமுக பவள விழாவில் திமுக மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : DMK ,Tolamai ,Pawal function ,Kanchipuram ,DMK coral festival general ,Pachaiyappan Men ,College ,
× RELATED ஐஎன்எஸ் தலைவராக ஷ்ரேயம்ஸ் குமார் தேர்வு