திருவாலங்காடு அருகே இளம் பெண் தற்கொலை

திருத்தணி:திருவாலங்காடு அருகே பழையனூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெகதீசன் என்பவரின் மகள் காயத்திரி(24. இவர் வீரராகவபுரம் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் என்பவரை காதலித்து 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துக் கொண்டார். இந்நிலையில், கடந்த 25ம் தேதி பூச்சிமருந்து குடித்த காயத்திரியை அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கிருந்து சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி காயத்திரி நேற்று உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக திருவாலங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருவாலங்காடு அருகே இளம் பெண் தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: