சென்னை தீவுத் திடலில் பட்டாசு கடைகள்: திருத்திய டெண்டர் வெளியிட ஐகோர்ட் ஆணை

சென்னை: சென்னை தீவுத் திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான டெண்டர் நிபந்தனைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளது என தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவுத்திடலில் பட்டாசு கடை அமைப்பதற்கான திருத்தியமைக்கப்பட்ட டெண்டரை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தீவுத்திடலில் பட்டாசு விற்பனை செய்வதற்கான டெண்டரில் வெளிப்படை தன்மை இல்லை என
சென்னை பட்டாசு விற்பனையாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் நடராஜன் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

 

The post சென்னை தீவுத் திடலில் பட்டாசு கடைகள்: திருத்திய டெண்டர் வெளியிட ஐகோர்ட் ஆணை appeared first on Dinakaran.

Related Stories: