கூடலூர் அருகே முகாமிட்டுள்ள காட்டு யானைகளை விரட்ட இரு கும்கி யானைகள் வரவழைப்பு..!!

உதகை: கூடலூர் அருகே குடியிருப்பு பகுதிக்கு அருகே முகாமிட்டுள்ள காட்டு யானைகளை விரட்ட இரு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே செபந்தோடு கிராமத்தை ஒட்டி புல்லட், கட்டை கொம்பன் ஆகிய இரு காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. நேற்று அந்த யானைகள் தாக்கி அப்பகுதியை சேர்ந்த மொய்தீன் என்பவர் உயிரிழந்தார்.

இதை அடுத்து யானைகளை அடர் வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர். இந்த நிலையில் காட்டு யானைகளை விரட்ட முதுமலையிலிருந்து விஜய், வசிம் ஆகிய இரு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வனத்துறையினர் 50க்கும் மேற்பட்டோர் பல்வேறு குழுக்களாக பிரிந்து காட்டுயானைகளை கண்காணித்து விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post கூடலூர் அருகே முகாமிட்டுள்ள காட்டு யானைகளை விரட்ட இரு கும்கி யானைகள் வரவழைப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: