டெல்லி: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். தமிழ்நாட்டுக்கான நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமரிடம் வலியுறுத்த உள்ளார். பிரதமரிடம் தமிழ்நாட்டின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதலமைச்சர் அளிக்க உள்ளார்.