×

குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்

திருச்சி, செப்.27: திருச்சி மேலகல்கண்டார் கோட்டை கணேஷ் நகர் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (48). இவர் மனைவி ரேணுகா (38). இவர் ரயில்வேயில் ஒப்பந்தப் பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர்களுக்கு மகன், மகள் ஆகியோர் உள்ளனர். மகேந்திரன் ரேணுகாவை இரண்டாம் தாரமாக திருமணம் செய்து கொண்டுள்ளார். ரேணுகா எந்நேரமும் செல்போனில் பேசிக்கொண்டிருந்துள்ளார். இதை மகேந்திரன் கண்டித்துள்ளார். இதனால் தம்பதி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. செப்.21ம் தேதி, ரேணுகா இரண்டு குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறினார். பல்வேறு இடங்களில் தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை. இது குறித்து பொன்மலை போலீசார் வழக்கு பதிந்து மாயமான இளம்பெண் மற்றும் குழந்தைகளை தேடுகின்றனர்.

The post குழந்தைகளுடன் இளம்பெண் மாயம் appeared first on Dinakaran.

Tags : Trichy ,Mahendran ,Ganesh Nagar ,Melakalkandar Fort, Trichy ,Renuka ,Mahendran Renuka ,
× RELATED திருச்சி மாவட்டத்தில் உரிமையாளர்களை...