×

சீனா சென்ற விமானம் கொல்கத்தாவில் அவசர தரையிறக்கம்

கொல்கத்தா: இந்நிலையில் விமானத்தில் பயணித்த ஈராக்கை சேர்ந்த 16வயது சிறுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக விமானம் கொல்கத்தாவில் தரையிறங்க வேண்டிய கட்டாயம் எழுந்தது. இதனை தொடர்ந்து நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையத்தில் இரவு 10.18மணிக்கு விமானம் அவசரமாக தரையிறங்கியது.

அங்கு தயாராக இருந்த மருத்துவ குழுவினர் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து மீதமுள்ள பயணிகளுடன் விமானம் புறப்பட்டு சென்றது.

The post சீனா சென்ற விமானம் கொல்கத்தாவில் அவசர தரையிறக்கம் appeared first on Dinakaran.

Tags : Kolkata Kolkata ,Iraq ,Kolkata ,Netaji Subhash Chandra Bose Airport ,
× RELATED நாட்டை உலுக்கிய மருத்துவர் பலாத்கார...