தர்மபுரியில் பூட்டிய வீட்டில் கொள்ளை முயற்சி

தர்மபுரி, செப்.27: தர்மபுரி லட்சுமி நகர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் வனிதா(41). இவரது கணவர் இறந்து விட்ட நிலையில், 2 மகள்களுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் வனிதா, கடந்த செவ்வாய்க்கிழமை அருகேயுள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். நேற்று முன்தினம் மீண்டும் திரும்பிய போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, அங்கிருந்து பீரோ திறக்கப்பட்டு பொருட்கள், துணிகள் சிதறி கிடந்தது. ஆனால் வீட்டில் இருந்த பொருட்கள் எதுவும் திருடு போகவில்லை. இதுபற்றி வனிதா அளித்த புகாரின் பேரில், தர்மபுரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தர்மபுரியில் பூட்டிய வீட்டில் கொள்ளை முயற்சி appeared first on Dinakaran.

Related Stories: