சென்னை: சென்னை விமான நிலையத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டார். டெல்லியில் நாளை பிரதமர் மோடியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார். மெட்ரோ 2-ம் கட்ட திட்டத்துக்கான நிதியை உடனே விடுவிக்க வேண்டும் எனவும் சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கான நிலுவை நிதியை விடுவிக்கவும் என பிரதமர் மோடியிடம் வலியுறுத்துகிறார்.