அரசியல் சதிகளை முறியடித்து சட்டப் போராட்டத்தால் சிறை மீண்ட செந்தில் பாலாஜிக்கு வாழ்த்துகள்: ஜவாஹிருல்லா பதிவு..!!

சென்னை: அரசியல் சதிகளை முறியடித்து சட்டப் போராட்டத்தால் சிறை மீண்ட செந்தில் பாலாஜிக்கு வாழ்த்துகள் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில்;

அரசியல் சதிகளை முறியடித்து சட்டப் போராட்டத்தால் சிறை மீண்டிருக்கும் சகோதரர் செந்தில் பாலாஜிக்கு வாழ்த்துக்கள்.

15 மாதம் சட்டப் போராட்டம் நடத்தி உச்ச நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கும் செந்தில் பாலாஜி அவர்களின் தியாகம் போற்றத்தக்கது.

வழக்கு விசாரணை தொடங்காமலேயே 471 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தது ஒன்றிய பாஜக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைதான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

அதிகாரத்திற்கு அஞ்சாமல் தலை வணங்காமல் தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்திப் பிணை பெற்றிருக்கிறார். உடல் நலத்தில் சற்று குன்றி இருந்தாலும் மனத் தைரியத்தில் விஞ்சி நின்று அதிகாரத்தை அதிர வைத்திருக்கிறார்.

இனி வரும் நாட்கள் மீண்டும் மக்கள் சேவையைத் தொடங்க மனப்பூர்வ வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post அரசியல் சதிகளை முறியடித்து சட்டப் போராட்டத்தால் சிறை மீண்ட செந்தில் பாலாஜிக்கு வாழ்த்துகள்: ஜவாஹிருல்லா பதிவு..!! appeared first on Dinakaran.

Related Stories: