கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் சிறை

சிவகங்கை, செப்.26: திருப்பத்தூர் அருகே திருமுக்காணிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா மகன் ரமேஷ்(33). காத்தனாராக பணிபுரிந்து வந்தார். கடந்த 29.10.2012 அன்று உறவினர் சேதுராஜ் மனைவி லட்சுமியிடம்(36) தான் கொடுத்து வைத்திருந்த பணத்தை கேட்டுள்ளார். அதற்கு லட்சுமி தர மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது லட்சுமியை தாக்கிய ரமேஷ் அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார். இதில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து கீழச்செவல்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷை கைது செய்தனர். இந்த வழக்கு சிவகங்கை மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கோகுல் முருகன் குற்றம் சாட்டப்பட்ட ரமேஷுக்கு ஆயுள் தண்டனையும் ரூ.5000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

The post கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் சிறை appeared first on Dinakaran.

Related Stories: