×

கொடநாடு வழக்கு தற்கொலை செய்த கம்ப்யூட்டர் ஆபரேட்டர் குடும்பத்தினரிடம் விசாரணை

கோத்தகிரி: ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கொடநாடு எஸ்டேட்டில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணியாற்றி தற்கொலை செய்து கொண்ட தினேஷின், கோத்தகிரி அருகே கெங்கரையில் உள்ள வீட்டுக்கு சிபிசிஐடி டிஎஸ்பி அண்ணாதுரை நேற்று சென்று அவரது தந்தை மற்றும் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினார். கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை சம்பவத்தின்போது பல்வேறு தொலை தொடர்வு உரையாடல்கள் நடைபெற்று உள்ளது. அந்த சமயத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணிபுரிந்த தினேஷ் தற்கொலை செய்துள்ளார். எனவே அவரது செல்போனுக்கு வந்த உரையாடல்கள் குறித்தும், அந்த செல்போன் எண் மற்றும் செல்போன் தற்போது எங்கு உள்ளது? என்பது குறித்தும் தினேஷ் குடும்பத்தினரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரித்ததாக தெரிகிறது.

The post கொடநாடு வழக்கு தற்கொலை செய்த கம்ப்யூட்டர் ஆபரேட்டர் குடும்பத்தினரிடம் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Kodanadu ,Kothagiri ,CBCID ,Jayalalithaa ,Koda Nadu ,Dinesh ,Kengarai ,Kodagiri ,
× RELATED கோடநாடு கணினி ஆபரேட்டரின் தந்தையிடம் விசாரணை..!!