மெக்கானிக்கை தாக்கிய 2 பேர் கைது குடியாத்தத்தில்

கே.வி.குப்பம்,செப்.25: குடியாத்தத்தில் ஆட்டோ ெமக்கானிக்கை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். குடியாத்தம் அடுத்த புவனேஸ்வரி பேட்டை பகுதியை சேர்ந்தவர் இன்ப முதல்வன் (19), என்.எஸ்.கே நகர் பகுதியை சேர்ந்தவர் இன்பநாதன்(21). இருவரும் நண்பர்கள். நேற்று முன்தினம் மாலை இவர்கள் இருவரும் நத்தம் சாலையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோதின் பேட்டை பகுதியை சேர்ந்த ஆட்டோ மெக்கானிக் இஸ்மாயில்(36), என்பவர் டூவீலரில் சென்று உள்ளார்.
அப்போது சாலையில் டூவீலருடன் நின்று கொண்டிருந்த இன்பநாதன், இன்ப முதல்வன் ஆகியோரை ஓரமாக நிற்கும்படி இஸ்மாயில் கூறியுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த இருவரும் சேர்ந்து இஸ்மாயிலை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதுகுறித்து இஸ்மாயில் டவுன் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் டவுன் போலீசார் இருவரையும் நேற்று கைது செய்தனர்.

The post மெக்கானிக்கை தாக்கிய 2 பேர் கைது குடியாத்தத்தில் appeared first on Dinakaran.

Related Stories: