×

சாலையில் தனியாக நடந்து சென்ற இளம்பெண்ணிடம் அத்துமீறல்: ஆட்டோ டிரைவர் கைது


சென்னை,: தேனாம்பேட்டை பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண், கடந்த 22ம் தேதி இரவு தனியார் நிறுவனத்தில் பணி முடிந்து, தனது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். தேனாம்பேட்டை திருவள்ளுவர் சாலையில் நடந்து சென்றபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர், திடீரென இளம்பெண்ணை கட்டியணைத்து, முத்தம் கொடுத்து பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத இளம்பெண் உதவி கேட்டு அலறியுள்ளார். சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓடி வருவதை பார்த்த அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பிறகு இளம்பெண் இதுபற்றி தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில், போலீசார் சம்பவ நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்திய போது, தேனாம்பேட்டை ஆலயம்மன் கோயில் தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அருண் (33) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர் மீது பெண்கள் வன் கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நேற்று முன்தினம் கைது ெசய்தனர்.

The post சாலையில் தனியாக நடந்து சென்ற இளம்பெண்ணிடம் அத்துமீறல்: ஆட்டோ டிரைவர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Thenampet ,Thiruvalluvar road ,
× RELATED சென்னை தேனாம்பேட்டையில் ரூ.18 கோடிக்கு...