×

பெண்ணின் ஆபாச படங்களை மாப்பிள்ளைக்கு அனுப்பிய வாலிபர்: செருப்பால் அடித்து பிரச்னையை தீர்த்துவைத்த பஞ்சாயத்தார்

பெரெய்லி: உத்தரப்பிரதேசத்தின் பெரெய்லியில் 22 வயது வாலிபரும், 18வயது பெண்ணும் உறவினர்கள். பெண்ணுக்கு வரன் பார்க்கும் இடங்களில் எல்லாம் மார்பிங் செய்யப்பட்ட ஆபாச படங்களை அனுப்பி வாலிபர் திருமணத்தை நிறுத்தியதாக தெரிகிறது. இளம்பெண்ணின் இந்த படங்கள் சமூக வலைதளங்களிலும் பரவி உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் ஹர்டுவா கிபாயத் உல்லா கிராம பஞ்சாயத்தில் முறையிட்டுள்ளனர். இதனை தொடர்ந்து இரு குடும்பத்தாரும் பஞ்சாயத்தார் முன்னிலையில் ஆஜரானார்கள்.

இந்த விவகாரத்தை காவல்நிலையத்துக்கு எடுத்து சென்றால் வாலிபரின் எதிர்காலம் பாதிக்கக்கூடும் என்பதால் அங்கேயே முடித்துக்கொள்வதற்கு முடிவு செய்யப்பட்டது. சம்பந்தப்பட்ட வாலிபரை செருப்பால் அடிக்கும் வரை அவரை மன்னிக்க மாட்டேன் என்று பாதிக்கப்பட்ட இளம்பெண் திட்டவட்டமாக தெரிவித்தார். இதற்கு பஞ்சாயத்தில் ஒப்புக்கொண்ட நிலையில், சம்பந்தப்பட்ட வாலிபரும் தன்னை செருப்பால் அடிக்க ஒப்புக்கொண்டார். தொடர்ந்து இளம்பெண்ணின் தாயார் அந்த வாலிபரை செருப்பால் அடித்ததை தொடர்ந்து பிரச்னை முடித்து வைக்கப்பட்டது.

The post பெண்ணின் ஆபாச படங்களை மாப்பிள்ளைக்கு அனுப்பிய வாலிபர்: செருப்பால் அடித்து பிரச்னையை தீர்த்துவைத்த பஞ்சாயத்தார் appeared first on Dinakaran.

Tags :
× RELATED சபரிமலை சன்னிதானத்தில் உண்டியலை உடைத்து பணம் திருடியவர் கைது